Wednesday, June 8, 2011

tamil

தமிழ் 
வணக்கம் என் முதல் பதிவு என்னை பற்றியும் என் ஊரை பற்றியும் சொல்லவந்தேன் 
நான்  சிவா எனது ஊர்   பண்டாரவெள.இலங்கையின் மத்திய மலைநாட்டின் ஒரு அழகிய நகரம். நான் படித்தது பண்டாரவெள  தமிழ் மத்திய கல்லூரி.பண்டாரவெள ஊவா மாகாணத்தின் ஒரு முக்கிய நகரம். வர்த்தக தலை நகரமும் கூட இங்கு தமிழர்கள் அதிகம் உள்ளார்கள்..எங்களுக்கு தமிழ் பற்று  அதிகம்.எனது பாடசாலைதான் மலையகத்தின் முதன்மை பாடசாலை.எனது  கல்லூரி பல கல்விமான்கள்,அரசியல்வாதிகள்,தொழிலதிபர்களை தந்துள்ளது அதேபோல் என்னை போன்ற ஆட்களையும் தந்துள்ளது .
நான் விற்பனை பிரதிநிதியாக தலைநகரில்  தொழில் புரிகிறேன்  .சமீபத்தில்தான்  பதவி உயர்வு கிடைத்தது  கடந்த எட்டு வருடங்களாக தலைநகரில் வசித்து வருகிறேன்.இன்று நான் சார்ந்த சமூகம் சார்பாக எழுதலாம் என்று  எழுத வந்தேன்.நான் தமிழன்.இந்திய வம்சாவளி தமிழன்.உலக மக்களுக்கு இலங்கையில் தமிழர்கள் எங்கு உள்ளர்கள் என்று கேட்டால் வடக்கு கிழக்கு மட்டும்தான் தெரியும்.எங்கள் ஊரை பற்றி யாருக்கும் தெரியாது.நாங்கள் இருபது லட்சம்  மக்கள் மலையக பகுதிகளில்  உள்ளோம்.தமிழ் கலாசாரத்தை,தமிழ் பேசி பேணி வருகிறோம்.எங்கள் ஊரை சேர்த்தவர்தான் முரளிதரன். 
இது என் முதல் பதிவு எங்க ஊரில் பிரசித்திபெற்ற  விடயங்களை பகிரலாம் எண்டு நினைக்குறேன்
பெரிய நகரங்கள்-பண்டாரவெள,பதுளை,ஹட்டன்,நுவரேலியா,கண்டி,பள்ளகேடுவா,நவலபிடிய
பாடசாலைகள்-பண்டாரவெள தமிழ் மத்திய கல்லூரி ,சரஸ்வதி தேசிய கல்லூரி,ஹிலண்ட்ஸ் கல்லூரி,மடலே ஹிந்து கல்லூரி.சென்ட் தாமஸ் கல்லூரி,
அரசியல் வாதிகள்-s தொண்டைமான்,
விளையாட்டு வீரர்-முரளிதரன்.
அடுத்த பதிவில் santhipom

No comments:

Post a Comment